விஞ்ஞானம் எவ்வாறு உண்மையை அறிகிறது? – தி. ஸ்ரீனிவாசன் - nelliadynet
Headlines News :
Home » » விஞ்ஞானம் எவ்வாறு உண்மையை அறிகிறது? – தி. ஸ்ரீனிவாசன்

விஞ்ஞானம் எவ்வாறு உண்மையை அறிகிறது? – தி. ஸ்ரீனிவாசன்

Written By www.kovilnet.com on Thursday, January 10, 2013 | 4:59 AM



இருபதாம் நு¡ற்றாண்டினை நவீன யுகம் என்கிறோம். நவீன யுகம் என்றால் என்ன என்று கேட்டால் அது விஞ்ஞான அறிவின் யுகம் என்று இயல்பாகவே பதில் கூறுவோம். வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இன்று விஞ்ஞானம் ஊடுருவியுள்ளது. விஞ்ஞானம் என்று கூறும்போது பொதுவாக நாம் தொழில் நுட்பத்தைத்தான் உத்தேசிக்கிறோம். தொலைதொடர்பு, போக்குவரத்து மற்றும் உற்பத்திமுறை ஆகியவற்றில் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகிவந்துள்ள பலவிதமான இயந்திரங்களையே விஞ்ஞானத்தின் வெற்றிகளாகவும் நவீன யுகத்தின் குறியீடாகவும் கருதுகிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இந்தக் கருவிகளை விட நமது வாழ்வினை நேரடியாகப் பாதித்துள்ளவை நவீன விஞ்ஞானத்தின் அறிதல் முறையும் அடிப்படைக் கருத்துக்களும் தான்.
நமது வாழ்வின் அன்றாட தளத்தில் கூட நாம் அனைத்துக்கும் விஞ்ஞானா£தியான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். உடல் நலப்பிரச்சினைகளானாலும் சா¢, உறவுகளான பிரச்சினைகளானாலும் சா¢, இன்று நமக்கு விஞ்ஞானா£தியான காரணகா¡¢யங்கள் தேவைப்படுகின்றன. இன்னும் கூறப்போனால் காரண-கா¡¢ய உறவென்பதே விஞ்ஞான ¡£தியாகத்தான் சாத்தியமாகும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது இன்று. நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட மதங்கள்கூட விஞ்ஞான விளக்கங்கள் (அதவாது மறு விளக்கங்கள்) தர இன்று முயல்கின்றன. அதாவது அவையும் விஞ்ஞான ¡£தியான அறிதல் முறையே உண்மயானது என்று மறைமுகமகா ஏற்றுக் கொள்கின்றன.
விஞ்ஞான அணுகுமுறை என்பது உண்மையில் என்ன? அதன் சிறப்பியல்புகள் யாவை? நாம் அனைவருமே தோராயமாக இதைக் குறித்து அறிந்திருப்போம். அன்றாட வாழ்வில் புலன் சார்ந்த பட்டறிவினால் நிரூபிக்கப்படுவதே விஞ்ஞான உண்மை என்று நாம் எடுத்துக் கொள்கிறோம். இது சா¢தான். நவீன விஞ்ஞானம் பொருளையும், பொருண்மையும் புறவயமானதாகவே பார்க்கிறது. புறவயநிரூபணத்துக்கு (empiricism) அதில் பெரும் பங்கு உண்டு.
ஆனால் பெருஞ்சிக்கல் சித்தாந்தத்தையோ (Chaos theory) நு¡ல் சித்தாந்தத்தையோ (String theory) எப்படி புறவயமாக நிரூபிக்க முடியும்? ஆகவே விஞ்ஞானம் புறவய நிரூபணத்திற்கும் அப்பாற்பட்ட வி¡¢வான உண்மையறிதல் முறைகளை வகுத்துள்ளது என்பது தெளிவு. அவை யாவை? அவற்றின் வகைகள் என்னென்ன?

முறைமையியல் (Methodology)

முறைமையியல் சமீபகாலம் வரை விஞ்ஞானத்தின் அறிதல்முறைகளைக் குறித்த ஆய்வுத்துறையாக விளங்கி வந்தது. விஞ்ஞானம் தன் உண்மைகளை வந்தடையும் முறைமையையும், அவ்வுண்மைகளை அது நிறுவும் முறைமையையும் குறித்து ஆராயும் அறிவுத்துறை இது. இதன் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் புறவயமாகவும் அனைவருக்கும் பொதுவாகவும் இருக்கக் கூடியது முறைமை (method) ஒன்றே என்பதாகும். ஓர் உண்மை கண்டடையப்பட்ட முறைமையையும், முன் வைக்கப்படும் முறைமையையும் நாம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவ்வுண்மையை நாம் பா¢சீலனைக்கு எடுத்துக் கொள்ளமுடியும். ஆகவே எந்த அறிவுத்துறையும் தன்னுடைய முறைமைகளை அத்துறை சார்ந்த அனைவருக்கும் பொதுவாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு தனி உண்மையை உ¡¢ய முறைமையின் வழியாகவே பொது உண்மையாக ஆக்க முடியும். ஒரு தனிநபா¢ன் ஊகம் ஒரு தனி உண்மை. அவ்வூகத்துக்கு அவர் வி¡¢வான தகவல்கள் மூலம் ஆதாரங்களை அளித்து நிறுவும்போது அது பொது உண்மை ஆகிறது. இவ்வாறு ஓர் ஊகம் சித்தாந்தமாக மாற்றப்படும்போது அத்துறையின் முறைமை கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு. அந்த முறைமை அத்துறை சார்ந்த அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அத்துறையிலும் பொதுவாக பிற அறிவுத் துறைகளிலும் அதுவரை உருவான எல்லா வளர்ச்சி நிலைகளையும் கணக்கில் கொண்டதாக அது இருக்க வேண்டும்.
ஆனால் முறைமையின் முக்கியமான இயல்பு எந்த முறையைக் கையாண்டு அது தன்னை நிறுவிக் கொள்கிறதோ அதே முறையைக் கையாண்டு அதை மறுப்பதற்கான வாய்ப்பையும் அது எதிராளிக்கு அளிக்க வேண்டும் என்பதே. அதாவது முறைமை உடைண ஒரு விஞ்ஞான ஆய்வினைப் பொறுத்தவரை அதை எப்படி பொய்ப்பிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அதன் உண்மையறியும் முறையைப் பயன்படுத்தியே அதைப் பொய்யாக்கவும் முடியும் – அது பொய் என்றால்.

பிற அறிதல் முறைகள்

விஞ்ஞான ஆய்வு இருபதாம் நு¡ற்றாண்டில் பல்வேறு துறைகளைத் தொட்டு வி¡¢ந்து பறந்தது. பிரபஞ்சவியல், மொழியியல், குறியீட்டியல், உளவியல் முதலிய அருவமான அறிவுத்துறைகளும் தனி விஞ்ஞானத் துறைகளாக மாறி விஞ்ஞானத்துறைகளாக மாறின. ஆகவே முறைமையியலின் விதிகள் போதாமலாயின. எப்படி விஞ்ஞான விதிகளை உருவாக்குவது, எங்கிருந்து விஞ்ஞான ஊகங்களின் விதைகளைக் கண்டெடுப்பது ஆகிய தளங்களுக்கும் விஞ்ஞானத்தின் அறிதல் முறை நகர வேண்டியிருந்தது. உதாரணமாக அணுக்கொள்கை மிகப் பழங்காலத்திலேயே கிரேக்க மரபிலும் இந்திய மரபிலும் இருந்தது. நவீன விஞ்ஞானத்தில் அணு என்ற கருத்தாக்கம் இந்தப் பழைய மரபிலிருந்ததுதான் வந்தது. ஓர் ஊகமாக முன்வைக்கப்பட்டு அன்றைய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டது. அணு என்பது ஒருவகை உருவகம் மட்டுமே என்று படிப்படியாக தெளிந்துவரும் இந்தக் காலத்தில் அந்த ஆதார உருவகம் எங்கிருந்து எப்படி முளைத்தது என்ற வினா முக்கியமானது. அதற்கு நாம் மெய்யியலுக்கு (Meta physics) போக வேண்டியுள்ளது.
அதே போல விஞ்ஞான விதிகள் மற்றும் நிரூபண முறைகள் மொழியிலும், விசேஷமாக உருவாக்கப்பட்ட குறியீட்டு மொழிகளிலும் உள்ளன. இவற்றின் விதிகளைப் பு¡¢ந்து கொள்ள மொழியியல் மிகவும் முக்கியமானது. நம் மனமும் அறிவும் இயங்கும் முறையே மொழியின் விதிகளை அமைக்கிறது. ஆகவே மொழியின் விதிகள் நம் அறிதலின் விதிகளும் கூட, விஞ்ஞான விதிகள் உருவாக்கப்படும் முறை, விளக்கப்படும் முறை இரண்டிலும் மெய்யியல், மொழி ஆகிய இரண்டு விஷயங்களின் பங்களிப்பு மிக அதிகம். விஞ்ஞானத்தின் அறிதல்முறைகளை இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு அமைக்க வேண்டியிருந்தது. சமீபகாலத்தில் விஞ்ஞானத்தின் அறிதல்முறை சார்ந்த சிந்தனைகளில் இவ்விஷயமே பொ¢ய மாறுதலை உருவாக்கியது. இருபெயர்கள் முக்கியமானவை. மெய்யியல் சார்ந்த தருக்கத்தை முன்வைத்தவர் கர்ல் பாப்பர். மொழியியல் அணுகுமுறையை முன்வைத்தவர் நாம் சாம்ஸ்கி.

ஊகமும் நிரூபணமும்

விஞ்ஞானத்தின் அறிதல் முறையே ஊகத்திற்கும் (Hypothesis) நிரூபணத்திற்கும் இடையேயான உறவில்தான் உள்ளது எனில் அது மிகை அல்ல. ஊகங்கள் மெய்ப்பிக்கப்படுதலில் பலவிதமான வகைகள் உள்ளன.
ஊகங்கள் முதலில் விஞ்ஞானயின் கற்பனையில் பிறவி கொள்கின்றன. இவை தகவல்¡£தியாக நியாயப்படுத்தப்படுகின்றன. அந்த ஊகத்தின் அடிப்படையில் பலவிதமான கணிப்புகள் செய்யப்பட்டு அவை சா¢பார்க்கப்படுகின்றன. இது “ஊகம் – சா¢பார்ப்புமுறை” (Hypothetico – deductive model of science) என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. அந்த முதல் ஊகங்கள் அந்தரத்தில் பிறவி கொள்வதில்லை. விஞ்ஞான ¡£தியாக தொகுக்கப்பட்ட தகவல்களில் தொடர்ந்து தேடலுடன் பயணம் செய்யும் விஞ்ஞானியின் மனத்தில்தான் அவை பிறவி கொள்கின்றன. ஆகவே தகவல்களிலிருந்து ஊகம், ஊகத்தினை அத்தகவல்களைக் கொண்டு சா¢பார்த்து சித்தாந்தமாக நிறுவுதல், அவற்றிலிருந்து மேலும் தகவல்கள் மேலும் ஊகங்கள் – இவ்வாறுதான் விஞ்ஞான ஆய்வு முன்னகர்கிறது.
ஓர் ஊகம் சில கணிப்புகளை முன்கூட்டியே கூறுகிறது. காலப்போக்கில் இவை நிரூபிக்கப் படுகையில் அந்த ஊகம் விஞ்ஞானக் கொள்கையின் அந்தஸ்து பெறலாம். இதை பொதுமையறிதல் (Inductivism) என்கின்றனர். கணிசமான கல்வியறிவு மேலான சமூக ஆரோக்கியத்திற்குக் காரணமாகிறது என்பது ஓர் ஊகம். இதை உடனடியாக நிரூபித்துவிட முடியாது. குறிப்பிட்ட கால அளவில் இது உண்மை என்று நிரூபிக்கப் படுகையில் கல்வியறிவினைப் பற்றிய அந்த ஊகம் ஓர் விஞ்ஞானக் கொள்கையாகக் கணிக்கப்படக் கூடும்.
ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு, அல்லது நிகழ்வுகளின் தொடருக்கு ஒருவர் முன்வைக்கும் ஊகமானது ஒரு மிகச்சிறந்த விளக்கத்தை முன்வைக்கக்கூடும். இந்நிலையில் அவ்விளக்கத்தை ஒரு விஞ்ஞானக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளலாம். இதை எடுத்தாளுதல் (Abduction) என்கிறார்கள். ஓர் அர்த்தத்தில் டார்வினின் பா¢ணாமக் கொள்கை இப்படிப்பட்ட ஒரு விளக்கமேயாகும். அதைவிட மேலான ஒரு விளக்கம் வரும்வரை அது விஞ்ஞானக் கொள்கையாகவே நீடிக்கும்.
தகவல்கள் ஓர் ஊகத்திற்கு உறுதிப்பாடு எதையும் தருவதில்லை. மாறாக அந்த ஊகத்திற்கு ஆதாரங்களை மட்டுமே அளிக்கின்றன என்று கூறப்படுவதுண்டு. இம்முறை நிறுவுதல் (Confirmation) எனப்படுகிறது. உதாரணமாக பிரபஞ்சத்தின் தோற்றம் ஒரு பெரு வெடிப்பின் மூலம் நிகழ்ந்ததாக இருக்கலாம் என்ற கொள்கையானது பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன் கூட்டங்கள் விலகி விலகிச் செல்லும் வேகத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருவெடிப்பு நிகழ்ந்தது என்பதற்கு விண்மீன் கூட்டங்களின் விலகிச்செல்லல் உறுதிப்பாடு எதையும் தருவதில்லை. வேறு விதமாகவும் நிகழ்ந்திருக்கலாம். பெருவெடிப்புக் கொள்கைக்கு அவை சாட்சியங்கள் அவ்வளவுதான். அதே தகவல்களை வைத்து வேறு ஒரு கொள்கையையும் நிரூபிக்க முடியும்.
ஒரு ஊகத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதைத் தகவல்கள் உறுதிப்படுத்துவது சாத்திய முறைமை (Probability) என்று கூறப்படுகிறது. தகவல்கள் எந்த எல்லைவரை ஓர் ஊகத்தை நிரூபிக்கின்றனவோ அந்த எல்லைவரை அதை ஏற்பது என்று இதைக் கருதலாம்.
ஓர் ஊகமானது விஞ்ஞானக் கொள்கையாக நிறுவப்படுவதன் பல்வேறு படிநிலைகள் இவை என்று கூறலாம்.

விஞ்ஞானக் கொள்கைகள் ஏற்கப்படுவது எப்படி?

விஞ்ஞானக் கொள்கைகள் அந்தந்த துறைகளுக்குள் எப்படி நிறுவப்பட்டாலும் அதைச் சமூகம் ஏற்பதும் தன் வயப்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். விஞ்ஞானத்தின் கடந்தகால வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் உண்மையினை அறிதல், உண்மையை நிரூபித்தல் என்ற இரு அடிப்படை விஞ்ஞான செயல்பாடுகளைத் தாண்டி அவ்விஞ்ஞானச் செயல்பாடுகளைச் சமூகம் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் விஞ்ஞானிகள் கடுமையாகப் போராடியுள்ளனர் என்பதைக் காணலாம். மாபெரும் விஞ்ஞானியான கலிலியோ உயிர்துறக்க நோ¢ட்டதே இதனால் தான்.
விஞ்ஞானத்தால் ஏற்கப்பட்ட கொள்கைகள் (அல்லது கண்டுபிடிப்புகள்) பிற்பாடு படிப்படியாக வாழ்க்கையின் அன்றாடத்தளத்துக்கு வந்து சேர்கின்றன. அங்குள்ள பழைய கருத்துக்களுடன் மோதுகின்றன. படிப்படியாக தங்களை நிறுவிக் கொள்கின்றன. இப்போக்கில் அவற்றில் உள்ள பல சிறு பிழைகள் திருத்தப்படுகின்றன. பிறகு அவை சமூகத்தால் ஏற்கப்பட்ட ‘உண்மை’ களாகிவிடுகின்றன. பிறகு ‘அடிப்படை உண்மைகளாக’ மாறிவிடுகின்றன. பிறகு வரும் சித்தாந்தங்கள் இந்த அடிப்படை உண்மையினால் அளவிடப்படுகின்றன. அதாவது விஞ்ஞான உண்மையானது அதன் விஞ்ஞானத் தன்மையால் மட்டுமல்ல அதன் வரலாற்றுத் தன்மையாலும் கூடத்தான் மதிப்பிடப்படுகிறது.
ஒரு விஞ்ஞான உண்மை சமூகத்தால் ஏற்கப்படுவதில் அதன் எளிமை (பு¡¢ந்து கொள்ள முடியும் தன்மை) மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்று இப்போது கூறப்படுகிறது. அதாவது ஒரு விஞ்ஞான ஊகம் நிரூபிக்கப்பட்டால் மட்டும் போதாது. எளிய முறையில் விளக்கப்படவும் வேண்டும். உதாரணமாக கிருமிகளினால் நோய் உருவாகிறது என்ற கொள்கையானது ஹோமியோபதி முதலிய பண்டைய மருத்துவ முறைகளின் விளக்கங்களை விட நேரடியானதும் எளிமையானதுமாகும். ஆகவே அது சமூகத்தால் இறுதி உண்மையாக சகஜமாக ஏற்கப்பட்டது. இன்று பல மருத்துவ முறைகள் அதை மறுக்கின்றன.
அறிவியல் சமூகம் உண்மையை ஏற்பதில் ஒரு வித அடிப்படைவாதம் அல்லது மாற்றங்களை மறுக்கும் போக்கு எப்போதும் இருப்பதாக விஞ்ஞான சித்தாந்திகள் கூறுகிறார்கள். அதாவது எந்தச் சித்தாந்தம் ஏற்கனவே உள்ள நம்பிக்கையுடன் பெருமளவு ஒத்துப் போகிறதோ, எது குறைவான அளவுக்கு மாற்றங்களை மட்டும உருவாக்குகிறதோ அதை ஏற்கும் மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர். உதாரணமாக சந்திரசேகா¢ன் கருத்துகளை (Black Hole) குறித்த விஞ்ஞானக் கொள்கையானது பல பழைய சித்தாந்தங்களிலிருந்து முழுமையாக மாறுபடுகிறது என்பதனால் அது அங்கீகா¢க்கப்பட நாற்பது வருடம் ஆயிற்று.
தொழில் நுட்பா£தியாக மறு ஆக்கம் செய்யப்படத்தக்க கொள்கைகளில் மட்டுமே ஐயத்திற்கிடமில்லாத நிரூபணம் சாத்தியமாகிறது. உதாரணமாக e=m2 என்ற கொள்கை அணுகுண்டு மூலம் உலகளாவிய தளத்தில் பாமர மக்கள் கூட ஏற்கும்படி நிறுவப்பட்டது. ஆனால் சார்புக் கொள்கைக்கு அப்படி ஒரு நிரூபணம் சாத்தியமேயில்லை. இப்படிப்பட்ட கொள்கைகள் ஏற்கப்படுவதில் சமூகத்தின் கலாச்சாரமும் மெய்யியல் மரபும் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாணமாக ·பிராய்டின் இன்பநாட்டக் கொள்கை பரவலாக ஏற்கப்பட்டமைக்கு அதற்கு கிறிஸ்தவ யூத மரபுகளில் உள்ள ஆதிபாவம் குறித்த நம்பிக்கையுடன் உள்ள உறவு ஒரு முக்கியமான காரணமாகும்.

ஊகங்கள் உருவாகும் விதம்

விஞ்ஞானம் பிரபஞ்த்தைப் பற்றிய அவதானிப்புகளை முதலில் உருவாக்குகிறது. இந்த அவதானிப்புகள் எளிய நோக்கில் அன்றாட வாழ்வில் தட்டுப்படாதவையாகும். ஒரு விஞ்ஞானக் கொள்கை என்பது இத்தகைய அவதானிப்புகள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தொகுக்கப்படுவதன் மூலம் உருவாவதாகும். அதாவது ஒரு விஞ்ஞானக் கொள்கைக்கு தகவல்¡£தியான ஒரு தருக்க ஒழுங்கு இருக்கும்.
விஞ்ஞானத்தத்துவ அறிஞர்கள் விஞ்ஞானத் தருக்கம் இருவகைப்பட்டது என்கிறார்கள். புறவயமாக அறிவதற்குச் சாத்தியமான தகவல்களின் அடிப்படையிலான தருக்கம் முதல் வகை. அப்படி அறிய சாத்தியமில்லாத தகவல்களினாலான தருக்கம் இரண்டாம் வகை.
தகவல்களை அடுக்கி ஒரு சித்தாந்தத்தை உருவாக்கும் ஒழுங்குமுறைக்குள் பல்வேறு வகையான போக்குகள் உண்டு. குறுக்கல் அணுகுமுறை (Reductionist) விலக்கல் அணுகுமுறை (eliminationist) பிரயோகித்தல் முறை (instrumentalist) என்று சிலவற்றைக் குறிப்பிடலாம். ஒரு சித்தாந்தத்தின் பின்பலமாக உள்ள தகவல் வா¢சையை அவதானிப்பின் சொல்லடுக்கு (observation sentence) என்றோ அவதானிப்புகளின் அடித்தளம் என்றோ கூறுவதுண்டு.
உதாரணமாக பா¢ணாம சித்தாந்தத்தை எடுத்துக் கொள்வோம். பறவைகளுக்கும் பல்லிகளுக்கும் இடையே எலும்பு அமைப்பில் உள்ள ஒற்றுமை ஒரு அவதானிப்பு. பல்லிகளுக்கும் மீன்களுக்கும் இடையேயான ஒற்றுமை இன்னொரு அவதானிப்பு. மீன்களுக்கும் ஒரு செல் உயி¡¢களுக்கும் இடையயோன தொடர்பு இன்னொரு அவதானிப்பு. இப்படி டார்வின் உயிர்கள் குறித்த பல்லாயிரம் அவதானிப்புகளைத் தொகுக்கிறார்.
இவற்றில் ஒரு பொதுவான சரடினை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற தகவல்களைப் பின்தள்ளி அவர் ஒரு சித்தாந்தத்தை உண்டு பண்ண முயலலாம் – குறுக்கல் முறை. தேவையற்ற தகவல்களை விலக்கி விலக்கி எஞ்சும் தகவல்களை நோக்கி செல்லலாம் – விலக்கல் முறை. எந்த தகவல் விளக்கம் தர உதவுமோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் – பிரயோகித்தல் முறை இவற்றில் ஏதாவது ஒரு முறையின் படி அவர் அத்தகவல்களைச் ‘சாராம்சப்படுத்தி’யாக வேண்டும். அப்படி சாராம்சப்படுத்தும் போது பா¢ணாம சித்தாந்தம் உருவாகிவிடுகிறது. இவ்வாறாக தகவல்களையோ அவரது அறிதல் முறையையோ மறுக்க முடிந்தால் பா¢ணாம சித்தாந்தத்தை மறுத்துவிடலாம்.
புறவயமாக சா¢பார்க்க முடியாத தகவல்களினாலானதாக ஒரு சித்தாந்தத்தின் பின்புலத் தருக்கம் இருக்குமென்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? அதை ஒரு மொழி சார்ந்த கருவியாக மட்டுமே கருத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களைப் பிரயோகவாதிகள் (instrumentalist) என்கின்றனர்.
சிறந்த உதாரணம் நுண்ணலகு இயற்பியல். (குவாண்டம் மெகானிக்ஸ்) ஆற்றல் இயங்கும் விதம் குறித்த ஒரு வகை மன உருவகம்தான் அது. அதைப் புறவயமாக நிரூபிக்கும் அவதானிப்புகள் ஏதும் அதன் பின்புலமாக இல்லை. ஆகவே அதை ஒரு மொழி சார்ந்த கருவியாகவே கருதவேண்டும். அதாவது தொ¢யாத ஒன்றை ஒரு குறிப்பிட்ட விதமாக சொல்லிப் பார்த்துக் கொள்கிறோம்.
பிற்பாடு இந்த மொழிசார் உருவகத்தில் எந்தப்பகுதி எந்த அளவு புறவயமான அவதானி[பகளால் நிறுவப்படுகிறதோ அந்த அளவு அதை ஏற்கலாம். உதாரணமாக நுண்ணலகு இயற்பியல் உருவகங்களின் ஒரு பகுதி அணு ஆற்றல் மாறுதல் குறித்த ஆய்வுகளில் புறவயமான அவதானிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. நுண்ணலகு இயற்பியலில் அப்பகுதி மட்டும் புறவய விஞ்ஞானக் கொள்கையாகக் கருதப்படுகிறது. இன்னமும் பிரபஞ்ச இயக்கம் குறித்த பெளதிகக் கொள்கைகளுடன் நுண்ணலகு இயற்பியலின் பெரும்பகுதி ஒத்திசைவு கொள்ளவில்லை என்பதும் இன்றைய இயற்பியலில் மிகப்பொ¢ய சவாலாக அதுவே உள்ளது என்பதும் உண்மையே.
விஞ்ஞான சித்தாந்தங்கள் குறித்து சமீபகாலமாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஞ்ஞானக் கொள்கைகள் இயல்பாகவே புறவயமானவை. கறாரானவை என்பது நம்பப்பட்டு வந்ததை உடைத்தவர் பி¡¢ட்டிஷ் தத்துவமேதையான விட்ஜென்ஸ்டீன். விஞ்ஞானசித்தாந்தங்களின் தருக்கமும் அதன் மொழியமைப்புக்கு கட்டுப்பட்டதே என்று அவர் வாதிட்டார்.
உதாரணமாக ‘ஆற்றல் அழிவற்றது’ என்பது ஓர் இயற்பியல் சூத்திரம். இது மிகப் பொதுவான ஒரு கூற்று. முற்றிலும் புறவயமானது என நாம் எண்ணுகிறோம். ஆனால் இங்கு ‘ஆற்றல்’ ‘அழிவு’ என்று எவை உத்தேசிக்கப்படுகின்றன என்ற வினாவை எழுப்பினால் இந்தச் சூத்திரம் எந்த அளவுக்கு மொழியின் இடுகுறித் தன்மையைச் சார்ந்து உள்ளது என்று தொ¢யவரும்.
இங்கு எழும் பிரச்சினை ஆற்றல் என்ற சொல்லை எப்படி வரையறுத்துக் கொள்வது என்பதே. அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் அச்சொல் சிறுசிறு வித்தியாசங்களுடன் தான் வரையறுக்கப்படுகிறது என்பது வெளிப்படை. இவ்வாறு விஞ்ஞான சூத்திரங்களில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் கறாரான புறவய நிர்ணயங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், திட்டவட்டமான அவதானிப்பின் விளைவாக இருக்கவேண்டும் என்று கூறுபவர்கள் உண்டு. இந்த அணுகுமுறை செயல்பாட்டுமுறை (opertionalism) என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு விஞ்ஞானக் கொள்கையும் பிறிதுடன் சகஜமாக உறவாட முடியும்.
இதற்கு மாறாக ஒரு கொள்கையின் கூற்றுக்கள் அத்துறையின் ஒட்டுமொத்த இயக்கத்தின் அடிப்படையில்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுபவர்களும் உண்டு. இவர்கள் கூற்றைப் பொருள் முழுமை அணுகுமுறை (Semanticholism) என்று கூறலாம். இதில் இன்னொரு தரப்பு உண்டு. ஒரு கொள்கையில் உள்ள சொல்லாட்சிகள் அக்கொள்கை பிற கொள்கைகளுடன் ஒத்துப் போகும் விதத்தை வைத்து அர்த்தப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் இவர்கள். இதை ஒத்திசைவு முழுமை அணுகுமுறை (Confirmationa holism) என்று கூறலாம்.
அதாவது ஆற்றல் என்றால் கறாராக இன்னது என்று வகுக்கப்பட்டு தேவைப்பட்டால் அனைவருக்கும் பொதுவாக நிறுவிக் காட்டப்படத்தக்க இருக்க வேண்டும் என்பது முதல் தரப்பு. அணுஆற்றலும் சா¢, உயிர் ஆற்றலும் சா¢ அங்கு பொதுவாக வரையறை செய்யப்பட்டிருக்கும். இரண்டாம் தரப்புப்படி ஆற்றல் குறித்த கொள்கை இயற்பியலைச் சார்ந்தது என்றால் இயற்பியலுக்குள் ஒட்டுமொத்தமாக ஆற்றல் எங்ஙனம் பொருள்கொள்ளப்படுகிறதோ அப்படி பொருள் கொள்ளப்படவேண்டும். மூன்றாவது அணுகுமுறைப்படி ஆற்றல் குறித்த நியூட்டனின் கொள்கையும் மார்க்ஸ் பிளாங்கின் கொள்கையும் ரூதர்போர்டின் கொள்கையும் ஒன்றாய் இணையும்போது உருவாகும் பொது அர்த்தமே ஆற்றல் என்ற சொல்லுக்குத் தரப்படவேண்டும்.
இப்பிரச்சினையானது உண்மையில் மேலும் சிக்கலானது. பல்வேறு அறிவியல்துறைகள் உருவாக்கும் பலவிதமான கொள்கைகளையும் தேற்றங்களையும் எப்படி பொது அறிவின் தளத்தில் தொகுத்துக் கொள்வது என்ற கேள்வியே இதன் அடிப்படை புறவயமான பட்டறிவு முன் காலத்தில் எல்லா விஞ்ஞானக் கொள்கைகளுக்கும் பொதுவான தளமான இருந்தது. இப்போது அது போதாமலாகியுள்ளது. தருக்க பூர்வமான ஒரு பொதுத் தளத்திற்கான தேவை இன்று உருவாகியுள்ளது.
விஞ்ஞானத்தின் உண்மை எப்படிப்பட்டது?
விஞ்ஞானக் கொள்கைகள் ஒவ்வொன்றும் தொடர்ச்சியாக மறுபா¢சீலனை செய்யப்படுகின்றன. தொடர்ந்து ஐயப்பாட்டுக்குள் இல்லாத ‘உண்மை’ எதையும் பொதுவாக விஞ்ஞானம் முன்வைப்பது இல்லை. உதாரணமாக உலகம் முழுக்க பரவலாக ஏற்கப்பட்ட பா¢ணாமக் கொள்கை மீது கூட பலவிதமான ஐயப்பாடுகள். மறுபா¢சீலனைகள் உள்ளன. அப்படியானால் இறுதி உண்மை எதையாவது விஞ்ஞானம் முன்வைக்குமா?
மிகச் சிக்கலான வினா இது. கடந்த கால விஞ்ஞானம் பொ¢தும் புலன்சார்ந்த பட்டறிவினை ஒட்டி இயங்குகிறது. இன்று நகூன நரம்பியல் புலன்சார் பட்டறிவியலின் அடிப்படைகளையே உலுக்குகிறது. புலனறிதல்கள் பலவும் நரம்பமைப்பின் இயல்புகளின் விளைவுகளே எனும்போது புறவயம், பொருண்மைகுணம் போன்ற பல ஆதாரங்கள் சிதறுகின்றன. இவ்வாறு பார்க்கையில் அறிவியலின் பல துறைகளுக்கு இடையே தீவிரமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.
அறிவியல் தேற்றங்களின் பெறுமானத்தை மதிப்பிடும் கணித உருவகமான ‘ராம்சே கணிப்பு முறை’ இப்போது பரவலாகக் கையாளப்படுகிறது 1. இது விஞ்ஞானத் தேற்றங்களைச் சாராம்சப்படுத்தும் ஒரு கணிப்புமுறையாகும்.
நாம் சாம்ஸ்கி போன்ற மொழியியல் அறிஞர்கள் எல்லா விஞ்ஞான தேற்றங்களையும் ஒரே குறியீட்டு மொழியில் கூறத்தக்க செயற்கை மொழிகளை உருவாக்க முயன்றுள்ளனர்.
தன் புகழ்பெற்ற நு¡லான ‘விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் பொதுத் தருக்கம்’ (1959) மூலம் கார்ல் பாப்பர் 2 விஞ்ஞானத் தேற்றங்களுக்கு பொதுவாக ஒரு தருக்க ஒழுங்கைக் கற்பிதம் செய்ய முயல்கிறார். புறவயமான நிருபணமுறையைப் பொ¢தும் நம்பிய நேர்க்காட்சிவாதிகளுக்கு (Positivists) எதிராக பாப்பர் முறைமையை முதன்மைப்படுத்தி ஆராயும் அணுகுமுறையை மேற்கொண்டார். அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் பிற கற்பனைப் போக்குகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் ‘பொய்ப்பித்தலே’ என்றார்.
பொய்பித்தல் (falsifiability) என்ற கருதுகோள் கார்ல் பாப்பா¢ன் சிந்தனையில் மிக முக்கியமானது. அறிவியலின் வளர்ச்சி அதை ஆதா¢க்கும் தகவல்களினால் உருவாவதில்லை என்றார் அவர். பிழை சா¢செய்தல், தொடர்ந்து தன் கொள்கைகளைப் பொய்ப்பிக்க முயலுதல் அதன் இயல்பு. அறிவியல் சித்தாந்தங்கள் அனைத்திற்கும் பொதுவான பொய்ப்பித்தல் முறைமை ஒன்றை உருவாக்க பாப்பர் முயன்றார் எனலாம்.
விஞ்ஞானக் கொள்கைகள் குறித்த விவாதங்களில் விஞ்ஞான யதார்த்தவாதிகளின் தரப்பு முக்கியமானது. இவர்களைப் பொறுத்தவரை ஒரு விஞ்ஞானக் கொள்கையானது தொடர்ச்சியான நிரூபணங்கள் மூலம் அன்றாட உண்மையாக ஆகும்போது நேரடியாக வாழ்வுடன் அதற்குள்ள உறவு காரணமாகவே அது இறுதி உண்மையாக ஆகிவிடுகிறது. அதன் பிறகு அதன் மீது பொய்ப்பித்தல் முறைமைகள் தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவை இல்லை. இந்தக் கருத்தை மறுப்பவர்கள் அக யதார்த்தவாதிகள் (Internal realists) என்று கூறப்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை ஓர் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டுதான் ‘உண்மை’ நிறுவப்பட முடியும்.
எந்த ஒரு விஞ்ஞான உண்மையும் அதன் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளே. பிற விஷயங்கள் வழக்கம்போல இருக்கும்போது மட்டும் செல்லுபடியாகக் கூடியவையாகவே உள்ளது. விஞ்ஞானத்தின் இந்த இயல்பு அதன் யதார்த்தமான அணுகுமுறையில் விளைவாகும். அது தன் எல்லைகளை விட்டு விலகி செல்வது இல்லை. விஞ்ஞானம் தான் அறிந்ததை எப்போதும் திருத்திக் கொள்ளத் தயாராக உள்ளது. இந்த அம்சம் மிகவும் கவனிக்கத்தக்கது. ஆன்மிகவாத சிந்தனைகளில் உண்மை இறந்தகாலத்தில் உள்ளது. அவற்றின் தருக்கம் அங்கிருந்து தொடங்கி தகவல்களுக்கு வருகிறது. விஞ்ஞானத்தில் இறுதி உண்மை ‘நிரந்தரமாக முன்னகர்ந்து கொண்டே இருக்கும்’ எதிர்காலத்தில் உள்ளது!
தி. ஸ்ரீனிவாசன்


 
1
 
0
 
Rate This

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template